தமிழகத்தில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று (மே 17) 639 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆகவும், பலி எண்ணிக்கை 78 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 558 பேர் தமிழகத்திலும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தவர்களும் அடங்கும். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது. 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,172 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 61 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 13,081 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 398 பேர், பெண்கள் 241 பேர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment