அதாவது டிசம்பர் மாதம் பட்ஜெட் விலையிலான
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்
என்றுதான் கூறவேண்டும்.
இதை செயல்படுத்த இந்தியாவின் குறிப்பாக இதை செயல்படுத்த இந்தியாவின்
மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோ,கூகுள்
நிறுவனத்தின் கூட்டாண்மை பயன்படுத்தலாம்.
குறிப்பாக பிசினஸ் ஸ்டாண்டர்டின் புதிய
அறிக்கையானது, வரவிருக்கும் பட்ஜெட் ஜியோ ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட்போனின் 10 கோடி யூனிட்கள் உருவாக்கம்
செய்யப்பட உள்ளன என்கிற ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின்
மேலும் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போனின்
குறைந்த விலை நிர்ணயத்தின் பெரிய பங்கை முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம்
எடுத்துக்கொள்ளும், காரணம் என்னவென்றால்
வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது தொகுக்கப்பட்ட ஜியோ டேட்டா திட்டங்களுடன்
அனுப்பப்படலாம். குறிப்பாக பயனர்கள் ஜியோபோன் 4ஜி பீச்சர் போனை வாங்குவதையே போலவே
இருக்கும்.
ரூ .5,999 விலையில் அட்டகாசமான Detel செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்! எப்படி வாங்கலாம்?
நம்பகமான நிறுவனமான ஜியோ சில
மக்களின் நம்பகமான நிறுவனமான ஜியோ சில
ஆண்டுகளுக்கு முன்பு அதன் முதல் 4ஜி பீச்சர் போனிற்கான நல்ல தேவையை கண்டறிந்தது.
இந்தியாவில் அதிகமான பயனர்கள் 4ஜி அனுபவிக்க வேண்டும் என்று ஜியோ நினைக்கிறது, இதன் மூலம் அவர்களின் 2ஜி அடிப்படையிலான
போன்கள் மெல்ல மெல்ல காணாமல் போகும்.
முகேஷ் அம்பானி
அன்மையில் முகேஷ் அம்பானி அவர்கள் வழக்கமான
ஸ்மார்ட்போனுக்கு மேம்படுத்துவதற்கு பல பீச்சர் போன் பயனர்கள் உள்ளனர்."
என்று கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை
வாங்குபவர்களின் ஆர்வத்தை நிர்ணயிப்பதில் விலை எப்போதும் ஒரு முக்கிய பங்கைக்
கொண்டுள்ளது. இந்த பண்பு சீனாவிலிருந்து வந்த சியோமி விவோ மற்றும் ஒப்போ போன்ற
பிராண்டுகளுக்கு குறைந்த விலையில் தரமான தயாரிப்புகளை வழங்க உதவியுள்ளது.
எல்ஜி கொண்டுவரும் புதிய வசதி: சிம் இல்லாமல்
கூட தொலைபேசியை பயன்படுத்தலாம்.! எப்படி?
இந்நிறுவனங்கள் எல்லாம்
இந்திய சந்தையில் இந்நிறுவனங்கள் எல்லாம்
வலுவான அடித்தளத்தை உருவாக்க அனுமதிப்பது மறறும் உள்ளூர் பிராண்டுகளை பின்னால்
தள்ள உதவுவது பட்ஜெட் விலைதான். அதேபோல் பட்ஜெட் விலை என்ற ஆயுதத்தை தான் சீன
மொபைல் ஜாம்பவான்களுக்கு எதிராக அம்பானி பயன்படுத்த விரும்புகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவன் உருவாக்கிய மொபைல் ஆப்ஸ்! 152
நாடுகளில் பயன்படுத்த கூகிள் அனுமதி!
வலைகளை மற்றும் கலக்கங்களை
மேலே குறிப்பிட்டபடி ஜியோபோன் வந்தால் சியோமி,ஒப்போ, ரியல்மி போன்ற நிறுவனங்களுக்கு நிச்சயம்
கவலைகளை மற்றும் கலக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பட்ஜெட் விலையில் ஜியோ
ஸ்மார்ட்போன் வெளிவரும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
إرسال تعليق