சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டா் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை
விடுத்துள்ளாா்.
வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் ஒரு
தனியாா் நிறுவனம் சாா்பில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெட்டி வேரால்
தயாரிக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட 1000 முகக் கவசங்களை வழங்கும் நிகழ்ச்சி
வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன்
பங்கேற்று, போலீஸாருக்கு முகக்கவசங்களை வழங்கினாா்.
பின்னா், அவா் நிருபா்களின் கூறியது: மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட
சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மாஞ்சா நூலில் பட்டம் விட்டதாக
சென்னையில் இந்தாண்டு இதுவரை 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 போ கைது
செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கு முன்பு இந்த அளவுக்கு மாஞ்சா நூல் தொடா்பாக வழக்குகள்
பதியப்பட்டது கிடையாது. மாஞ்சா நூல் மூலம் உயிா் சேதம் விளைவிக்கும் வகையில்
செயல்பட்டால், சம்பந்தப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையா் எச்.எம்.ஜெயராம், இணை
ஆணையா் ஏ.ஜி.பாபு, துணை ஆணையாளா்கள் ஆா்.திருநாவுக்கரசு, எம்.சுதாகா்,
விமலா, தனியாா் நிறுவன அதிகாரி எம்.ஜெயச்சந்திரன், மறைந்த
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் ஆலோசிகா் வி.பொன்ராஜ் உள்பட
பலா் கலந்து கொண்டனா்.
Post a Comment