இயக்குநர் கே பாக்யராஜ் இயக்கத்தில் பாக்யராஜ் , ஊர்வசி
நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. கிட்டத்தட்ட 300
நாட்களைக் கடந்து ஹவுஸ்புல்லாக ஓடிய திரைப்படம். 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில்
எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்தது. 37
ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இம்முயற்சியை இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் சசிகுமார் கூட்டணி முன்னெடுத்து
இருக்கிறது. படத்தை, பாக்யராஜே இயக்க, நாயகனாகக் களமிறங்குகிறார் சசிகுமார்.
கே பாக்யராஜ் , சசிகுமார்
இதற்கான, முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கதை விவாதத்தில்
இக்குழுவினர் பங்கேற்ற புகைப்படம், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பவர்
மற்றும் சில கதாபாத்திரங்கள் அறிமுகமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்
சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் இயக்குநர்
கே.பாக்யராஜ் களமிறங்கியிருக்கிறார்.
Post a Comment